உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஈக்கு என்ன வேலை?

1

Posted on : Monday, July 07, 2014 | By : ஜெயராஜன் | In :

மாம்பழக் கவிராயர் என்பவரும் ராமச்சந்திர கவிராயர் என்பவரும் நல்ல நண்பர்கள்.மாம்பழக் கவிராயருக்கு கண் பார்வை சிறிது மங்கலாயிற்று.ஒரு நாள் ராமச்சந்திரக் கவிராயர் அவரைப் பார்க்க வந்தபோது வந்திருப்பது யார் எனக் கேட்டார்.ராமச்சந்திரர் சற்று அழுத்தமாக ,''இராமச்சந்திரன் வந்திருக்கிறேன்,''என்றார்.தமிழில் 'ர' என்ற எழுத்துடன் எந்த வார்த்தையும் ஆரம்பிக்க இயலாது என்பதால் அப்படிப்பட்ட பெயர்களுக்கு முன்னால்  'இ' சேர்ப்பது வழக்கம்.அதன்படியே அவரும் சொன்னார்.ஆனால் எழுதும்போது மட்டுமே அவ்வாறு சேர்ப்பதுண்டு.பேசும்போது சாதாரணமாகவே 'இ' சேர்க்கமாட்டார்கள்.எனவே மாம்பழக் கவிராயர்,''கவிராயரே,ஈக்கு இங்கு என்ன வேலை?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.ராமச்சந்திரரும்தனது  தவறை அறிந்து கொண்டாலும் சிரித்துக் கொண்டே, ''மாம்பழம் இருக்கும் இடத்தில் ஈ இருக்கத்தானே செய்யும்!''என்றார்.கவிராயர்கள் என்றால் சும்மாவா?

வால்டேரின் பொன்மொழிகள்.

2

Posted on : Friday, July 04, 2014 | By : ஜெயராஜன் | In :

உலக சிந்தனையாளர்களில் மிக சிறந்த இடத்தில் இருப்பவர் பிரான்ஸ் தேசத்தின் வால்டேர்.அவரின் பொன் மொழிகள் சில:
********
ஒரு கிராமம் நல்ல கிராமமாக இருக்க ஒரு மதம் இருந்தாக வேண்டும்.கடவுள் இல்லையென்றால் அவரைக் கண்டு பிடிப்பது அவசியம் ஆகிறது.சாதாரண மக்களுக்கு பரிசு மற்றும் தண்டனை வழங்கும் கடவுள் ஒருவர் தேவை.
********
ஆதி காலத்தில் அறியாமையும் பயமுமே கடவுள்களை உருவாக்கின. உற்சாகம்,விருப்பம்,வஞ்சனை ஆகியவை அவற்றை அலங்கரித்தன அல்லது சீரழித்தன.வலிவானவை அவற்றை வணங்குகின்றன.உடனே நம்பி விடும் பழக்கம் அவற்றைப் பாதுகாக்கின்றன.பழக்க வழக்கங்கள் அவற்றை மதிக்கின்றன.மனிதர்களின் குருட்டுப் பார்வை அவற்றை சாதகமாக்கிக் கொள்ள, கொடுங்கோன்மை அவற்றைத் தாங்குகின்றன.
********
மனசாட்சி என்பது கடவுளின் குரல் அல்ல.வளர்ந்து கொண்டிருக்கும் சிறுவர்கள் மீது பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் அள்ளிக் கொட்டிய தடைகள்,அவர்கள் மனதில் தேங்கியிருப்பதே மனசாட்சி ஆகிறது.
********
நான் கடவுளைத் தொழுது கொண்டே இறக்கிறேன்;நண்பர்களை நேசித்துக் கொண்டே இறக்கிறேன்.என் விரோதிகளை வெறுக்காது மூட நம்பிக்கைகளை மிகவும் வெறுத்துக் கொண்டே இறக்கிறேன்.
********
சின்னப் புத்தி உடையோரை பொறாமையே அழிக்கிறது.
********
நாம் அனைவரும் பலவீனம் மற்றும் தவறுகளுடன் அமைந்தவர்கள். ஒருவருக்கொருவர் நம்முள் இன்னொருவரின் தவறுகளை மன்னிப்போமாக!இதுவே இயற்கையின் முதல் சட்டம்.
********