உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தமிழ் நூல்கள்.

0

Posted on : Friday, August 30, 2013 | By : ஜெயராஜன் | In :

ஆற்றுப்படை  நூல்கள்:
திருமுருகாற்றுப்படை.
பொருநராற்றுப்படை.
பெரும்பாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
தணிகையாற்றுப்படை.
******
எட்டுத்தொகை நூல்கள்:
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு .
******
ஐம்பெரும் காப்பியங்கள் :
சீவக சிந்தாமணி,சிலப்பதிகாரம்,மணிமேகலை,குண்டலகேசி,வளையாபதி.
******
ஐஞ்சிறு காப்பியங்கள்:
யசோதரா காவியம், உதயணகுமார காவியம், நீலகேசி, நாககுமார காவியம், சூளாமணி.
******
கடையெழு வள்ளல்கள்:
பாரி,எழினி,மலயன்,ஆய் ஆண்டிரன்,நள்ளி,பேகன்,ஓரி.
******

புத்திசாலித்தனம்

2

Posted on : Thursday, August 29, 2013 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் எப்போதும் மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று நினைத்து விடுவார்களோ என்று பயப்படுகிறீர்கள்.மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டால் அது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகப் பட ஆரம்பித்து விடுகிறீர்கள்.அநேகர் உங்களை முட்டாள் என்று நினைத்தால் நீங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறீர்கள்.புத்திசாலியை மட்டும் ஏமாற்ற முடியாது.அவன் பார்ப்பதற்கு முட்டாள் போன்று தோன்றுவான்.
நீங்கள் உங்களைக் கவனித்திருக்கிறீர்களா?நீங்கள் எப்போதும் உங்கள் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டவே முயற்சி செய்கிறீர்கள்.உங்கள் அறிவாற்றலைக் காட்ட யாரையாவது தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களை விடக் குறைவான புத்திசாலித்தனம் உடையவரைத் தேடி அலைகிறீர்கள். அம்மாதிரி ஆள் கிடைத்தவுடன் உங்கள் அறிவுத் திறமையை அவரிடம் காண்பிப்பதில் பெருமை கொள்கிறீர்கள்.ஒரு புத்திசாலி தனது புத்திசாலித்தனத்தை வெளிக்காட்ட வேண்டிய அவசியமில்லை.அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே இருக்கிறான்.

இது தெரியுமா?

0

Posted on : Wednesday, August 21, 2013 | By : ஜெயராஜன் | In :

சங்கரன் என்றால் யார்?சம் என்றால் மங்களம்.கரோதி என்றால் உண்டு பண்ணுதல் .எனவே மங்களம் உண்டு பண்ணுபவன் தான் சங்கரன்.
******
சேஷன் என்றால் தாசன்,அடிமை என்று பொருள்.
******
நிர்மலன் என்றால் அழுக்கில்லாதவன் என்று பொருள்.
******
அச்சுதன் என்றால் தான் நழுவி கீழே விழாதவன்:தன்னைப் பற்றியவர்களை நழுவ விடாதவன்.
******
சாரு  என்றால் அழகு.
******
அஸ்தி என்றால் இருக்கிறது என்று பொருள்.இருக்கிறது என்று சொல்பவன் ஆஸ்திகன்.நாஸ்தி என்றால் இல்லை என்று பொருள்.இல்லை என்று சொல்பவன் நாஸ்திகன்.
******
கிருஷ்ணன் என்ற பேருக்குப் பொருள் என்ன தெரியுமா?க்ரு என்றால்  பூமி.ண என்றால் விடுவித்தல்.பூமியிலிருந்து நம்மை விடுவித்து மோட்சத்தைக் கொடுப்பவன் கிருஷ்ணன்.
******
சுதர்ஷன் என்றால் நல்ல பாதையைக் காட்டுபவன் என்று பொருள்.
******
விபு என்றால் எங்கும் நிறைந்திருப்பவன் என்று பொருள்.
******
******

கண்டுபிடி-3

0

Posted on : Saturday, August 17, 2013 | By : ஜெயராஜன் | In :

பால் விநியோகம் செய்யும் நான்கு இளைஞர்களிடம் மொத்தம் 24 பால் கேன்கள் இருந்தன.அவை எல்லாம் ஒரே அளவுடையவை.ஒரே கொள்ளளவு  உடையவை.அவற்றுள் 9 கேன்களில் பால் முழு அளவிற்கு இருந்தது. 10 கேன்களில் பால் பாதிதான் இருந்தது.மீதி 5 கேன்கள் காலியாக இருந்தன. இப்பொழுது இந்த இளைஞர்கள் தங்களுக்குள் கேன்களைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.அப்படிப் பிரிக்கும் போது ஒவ்வொருவரிடமும் ஒரே எண்ணிக்கையில் கேன்கள் இருக்க வேண்டும்.அனைவரிடமும் பால் ஒரே அளவு இருக்க வேண்டும்.எவ்வாறு பிரிப்பது என்று தெரியாமல் அவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் அவர்களுக்கு உதவ முடியுமா?

விடை:மூன்று இளைஞர்களும்  ஒவ்வொருவரும் பால் முழுமையாக உள்ள இரண்டு கேன்களையும் பாதிப் பால் உள்ள கேன்கள் மூன்றினையும்,ஒரு காலி கேனையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.நான்காவது இளைஞர் மூன்று முழுமையான கேன்களையும் ஒரு பாதி நிறைந்த கேனையும் இரண்டு காலி கேன்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது ஒவ்வொருவரிடமும் ஆறு கேன்கள் இருக்கும்.ஒவ்வொருவரிடமும் 3.5 முழுக் கேன் கொள்ளளவிற்குப் பால் இருக்கும்.

ஏமாற்றமா?

1

Posted on : Tuesday, August 13, 2013 | By : ஜெயராஜன் | In :

ஏதாவது ஒரு விசயத்தில் ஏமாற்றம் அடைந்து விட்டீர்களா?அதை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்யுங்கள்.நாளானால் அதுவே உங்கள் மூளையை ஒரு அமிலம் போல அரிக்க ஆரம்பித்துவிடும்.ஏமாற்றத்திலிருந்து விடுபட சில யோசனைகள்:
1.முதலில் பதட்டப்படாமல் சற்று அமைதி ஆகுங்கள்.உங்களுக்கு சிறிது கால அவகாசம் கொடுத்துக் கொள்ளுங்கள்.இதே பிரச்சினை நாளைக்கு சாதாரணமானதாகத் தெரியலாம்.
2.உங்களுக்கோ பிறருக்கோ எந்த பாதிப்பும் இல்லாமல் உங்கள் ஏமாற்ற உணர்வுக்கு வடிகால் கொடுங்கள்.
3.உங்கள் பெற்றோரிடமோ,மனைவியிடமோ,நண்பர்களிடமோ இது பற்றி மனம் விட்டுப் பேசுங்கள்.
4.கோபப்படுவதற்கோ,வருத்தப்படுவதற்கோ உரியதுதானா இப்பிரச்சினை என்று கொஞ்சம் யோசியுங்கள்.
5.இந்தப் பிரச்சினையிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டு அடுத்து இதைவிட சிறப்பாக எப்படி செயல்பட முடியும் என்று பாருங்கள்.
6.ஒரு தோல்வி உங்களை ஒரு உதவாக்கரை ஆக்கிவிட முடியாது.உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.
7.ஏமாற்றத்தைத் தவிர்க்க நன்கு திட்டமிடுங்கள்.அதில் மிக உறுதியாக இருக்க வேண்டாம்.திட்டங்கள் தேவைக்கேற்ற மாறுதல்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
8.ஏமாற்றம் கண்டு மனம் தளர்ந்து விடாதீர்கள்.இந்த சூழ்நிலையில் இந்தக் காரியத்தை நான் சிறப்பாக செய்கிறேனா என்பதை மட்டும் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
9.நாளை நமதே என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.கெட்டிக்காரத்தனம் என்பது இயற்கையாய் வருவதல்ல.நாம் வளர்த்துக் கொள்வதுதான்.

பொன்மொழிகள்-44

0

Posted on : Monday, August 12, 2013 | By : ஜெயராஜன் | In :

சத்தம் அதிகம் உள்ள இடத்தில்
சட்டம் அமைதியாகிவிடும்.
******
ஒரு கையைப் பிடிப்பதற்காக மூளையைத் தொலைக்கும் செயலே காதல்.
******
மக்களிடம் எதையும் ரகசியமாய்ச் சொன்னால்  நம்புவார்கள்.
******
முடியுமா என்பது முட்டாள்தனம்:
முடியாது என்பது மூடத்தனம்.
முடியும் என்பதே மூலதனம்.
******
வீழ்வது வெட்கத்திற்குரிய விசயமில்லை.
வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கம்.
******
எவன் மனிதர்களை அடக்கி ஆள்கின்றானோ
அவன் குழப்பத்தில் வாழ்கின்றான்.
எவன் மற்றவர்களால் அடக்கி ஆளப்படுகின்றானோ
அவன் துன்பத்தில் வாழ்கின்றான்.
******
திறமை என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது.-அடக்கத்துடன் இருங்கள்.
புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது-நன்றியுடன் இருங்கள்.
அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொள்வது-எச்சரிக்கையுடன் இருங்கள்.
******
ஒரு தோல்வியிலிருந்து இன்னொரு தோல்விக்கு உற்சாகம் குறையாமல் செல்வதே வெற்றி.
******
யாராவது ஒரு வேலையை உங்களால் செய்ய முடியுமா என்று கேட்டால்  முடியும் என்று சொல்லிவிட்டு அதை எப்படி செய்வது என்பதை யோசியுங்கள்.
******
மனிதன்குறையுடையவன்மட்டுமல்ல.குறைகாண்பவனும்ஆவான்.
பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன்.தன் குறையைக் காண்பவன் முழு மனிதன்.
******
என் மகன் ஒரு தவறு செய்தால் அவனுக்காகப் பரிந்து பேச மாட்டேன்.
அப்படிப் பேசி நான் வெற்றி பெற்றுவிட்டால் பின்னால் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
******

தெளிவான முடிவு

0

Posted on : Saturday, August 10, 2013 | By : ஜெயராஜன் | In :

எந்த ஒரு விசயத்தையும் சில கோணங்களில் ஆராய்ச்சி செய்து முடிவு எடுத்தால்  அம்முடிவு தெளிவான முடிவாக இருக்கும்.
1.நான் இப்போது எடுத்துள்ள முடிவு உணர்ச்சி பூர்வமான முடிவா,அல்லது அறிவு பூர்வமான முடிவா?
2.இந்த நிலைப் பாட்டிலிருந்து நான் பின் வாங்குவது எனக்குப் பெருமையா, பின்னடைவா?
3.இந்த முடிவின் விளைவுகள் என்னவாக இருக்கும்?அவற்றை எதிர் கொள்ளும்  திறன் நமக்கு உண்டா?
4.இந்த முடிவின் மீது விமரிசனங்கள் எப்படி இருக்கும்?அவை புறக்கணிக்கத்
தக்கவையா,ஏற்கத் தக்கவையா?
5.எதிராளி இதற்கு எத்தகைய பதிலடி கொடுப்பான்?அவனை நாம் எடுக்கும் முடிவு, சாய்க்க வல்லதா,பணிய வைப்பதா,முன்னிலும் வீறு கொண்டு எழச் செய்வதா?
6.எதிராளி இதனால் துன்பப் படுவாரா?இதில் நம் மகிழ்ச்சி மட்டும் முக்கியமா?
7.இது பற்றி ஒரு சிலரிடம் கலந்து ஆலோசித்தால் என்ன?
8.முடிவுக்கு வர இன்னும் கால அவகாசம் இருக்கிறதா?ஆம் எனில்,அந்தக் கால அவகாசத்தை நாம் இன்னும் நன்றாக சிந்திக்கப் பயன் படுத்திக் கொண்டால் என்ன?

உண்மையான பிரார்த்தனை

0

Posted on : Wednesday, August 07, 2013 | By : ஜெயராஜன் | In :

நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்த கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்ததில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்து ஒரு தீவில் ஒதுங்கினார்கள். அங்கே மனித நடமாட்டமே இல்லை.குடிக்கத்தண்ணீர் இல்லை. உண்ண உணவு எதுவும் இல்லை.ஒதுங்க ஒரு நல்ல இடம் இல்லை.கடுமையாக அலைந்து ஒன்றும் பயனில்லாது போகவே இருவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது என்று முடிவு செய்தனர்.ஒருவன் கடவுளிடம் வெகு நேரம் பிரார்த்தனை செய்தான்.மற்றொருவனோ ஒரே நிமிடத்தில் தனது பிரார்த்தனையை முடித்துக் கொண்டான்.பிரார்த்தனை முடிந்து அவர்கள் சிறிது தூரம் நடந்தபோது அங்கே  ஒரு நீரூற்று தென்பட்டது.தாகம் தீர அதில் அவர்கள் தண்ணீர் பருகினார்கள்.இப்போது பசி வந்து காதை  அடைத்தது.மீண்டும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்கள்.இப்போதும் ஒருவன் மட்டும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்ய மற்றவன் ஒரே நிமிடத்தில் முடித்துக் கொண்டான்.சிறிது தூரம் சென்றதும் ஒரு பழ  மரத்தைக் கண்டு ஆவலுடன் பழங்களைத்  தின்று பசியாறினார்கள்.அந்தத் தீவில் வாழ வழியில்லை என்பதை உணர்ந்து மறுபடியும் அந்தத் தீவிலிருந்து வெளியேறி ஊர் போய்ச் சேர வேண்டும் என்று இருவரும் இறைவனைப் பிரார்த்தித்தார்கள். வழக்கம்போல ஒருவன் மட்டும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்ய மற்றவன் ஒரு நிமிடத்தில் முடித்துக் கொண்டான்.என்ன ஆச்சரியம்.அப்போது அத்தீவின் பக்கம் ஒரு கப்பல் வந்தது.இவர்கள் கூச்சல் போட்டதும் கப்பலில் இருந்தவர்கள் இவர்களைக் கவனித்து,வந்து இருவரையும் கப்பலுக்கு அழைத்துச் சென்றார்கள்.அப்போது நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தவனின் மனதில் ஒரு வஞ்சக எண்ணம் உருவானது.அவன் மற்றவன் கப்பலில் ஏற கூடாது என்று தடுத்தான்.ஏன் என்று அனைவரும் கேட்க அவன் சொன்னான்,''ஒவ்வொரு முறையும் நான் நீண்ட நேரம் வேண்டி உருகிக் கடவுளை வழிபட்டு ஒவ்வொன்றையும் அடைந்தேன்.இவனோ பேருக்குப் பிரார்த்தனை செய்தவன்.இவனுக்கு இந்த பலனை அடையத் தகுதியில்லை,'' .அப்போது வானிலிருந்து ஒரு அசரீரி கேட்டது, ''மூடனே,உன்னால்தான் எல்லாம் நடந்தது என்று நீ நினைக்கிறாய். ஆனால் உண்மையில் உன் நண்பனின் பிரார்த்தனைக்குத்தான் எல்லாமே கிடைத்தது.ஒரு நிமிடம்தான் வேண்டினாலும் அவன் என்ன வேண்டினான் தெரியுமா?'கடவுளே,என் நண்பன் கேட்கும் உதவிகளை எல்லாம் செய்து கொடுங்கள்,'என்பதுதான்.அவனுடைய உண்மையான பிரார்த்தனைக்கு செவி சாய்த்துத்தான் நான் எல்லா உதவிகளையும் செய்தேன்,''முதலாமவன் வெட்கித் தலை குனிந்து தன் நண்பனிடம் மன்னிப்புக் கோரினான்.பின் கடவுளுக்கு நன்றி கூறி நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தான்.மற்றவன் வழக்கம்போல ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்துவிட்டு தன் வேலையைப் பார்க்கப்போனான்.

மனிதன் எத்தனை வகை!

1

Posted on : Tuesday, August 06, 2013 | By : ஜெயராஜன் | In :

மற்றவர்களிடம் பழகும் விதத்தை வைத்து மனிதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1.Introverts:மற்றவர்களிடம் அதிகம் பழக மாட்டார்கள்.தனிமையை ரசிப்பார்கள். அதற்காக மற்றவர்களை அவர்களுக்குப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை.அன்பும் பாசமும் இருந்தாலும் வெளிப்பாடு வெளிப்படையாய் இருக்காது..
2.Extroverts:எப்போதும் சகஜமாகப் பழகுவார்கள்.ஆட்கள் இருக்கும் சூழலையே விரும்புவார்கள்.வெளிப்படையாகத் தங்கள் உணர்வுகளைக் காட்டுவார்கள்.
3.ambiverts:மேலே கூறிய இருவகையினருக்கும் இடைப்பட்டவர்கள்.

மனிதனின் புத்தியின் தன்மை கொண்டு மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
தைல புத்தி:ஒரு பாத்திர நீரில் எண்ணெயை விட்டால் நீரின் மேல் எண்ணெய் அப்படியே பரவும்.அதுபோல கேட்ட விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு இதரர்களுக்கும் சொல்லித் தெளிய வைப்பார்கள்.
கிரத  புத்தி: நெய்யை வழித்து ஒரு பாத்திர நீரில் போட்டால் அந்த நெய் அப்படியே மிதக்கும்.பிறரிடம் கேட்பதை அப்படியே தான் அறிந்து கொள்வர்.பிறர் கேட்டால்  சொல்லத் தெரியாது.
கம்பள புத்தி:விழாவில் கம்பளம் விரித்து,விழா முடிந்தவுடன் ஒரு உதறு உதறி வைப்பதுபோல வரும்போது ஒன்றும் தெரியாமல் வந்து திரும்பப் போகும்போது உதறிய துப்பட்டி போல ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் பொய் விடுவர்.
களி மண்  புத்தி: எந்த விசயமும் இவர்களுக்குப் புத்தியில் ஏறாது.

அச்சம்

0

Posted on : Monday, August 05, 2013 | By : ஜெயராஜன் | In :

வாழ்வில் நடப்பனவற்றைப் பொருட்படுத்தாமல் சகித்துக் கொண்டே இருந்து விடுதல்,அவற்றோடு பழகிப் போய்விடுதல்,சூழ்நிலையில் நிகழும் நிகழ்ச்சிகள் மீது பழி போடுதல்-இத்தகைய மனோபாவங்களுடன் தான் அனைவரும் வாழ்ந்து வருகிறோம்.
உள்ளபடி,உள்ள நிலையிலிருந்து நாம் ஏன் தப்பி ஓடுகிறோம்? எடுத்துக் காட்டாக, நாம் சாவைக் கண்டு அஞ்சுகிறோம்.சாவுக்குப்பின் நமக்கு நேரிட இருக்கும் நிலையினைப் பலவிதமான கருத்துக்கள், நம்பிக்கைகள், கொள்கைகள் இவற்றினை உருவாக்கி,அவற்றின் மூலம் சாவு என்ற உண்மையை உள்ளது உள்ளபடி காண இயலாதவாறு மறைத்து விடுகிறோம்.என்ன செய்தால் என்ன?சாவை நம்மால் தவிர்க்க முடியாது.அது நம்மை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.எதனையும் உள்ளது உள்ளபடி உணர்வதற்கு அதன் முன் நின்று கண் கொண்டு நோக்க வேண்டுமேயன்றி அதற்கு முதுகு காட்டி ஓடுவதில் பயனில்லை.நம்மில் பெரும்பாலோனோர் வாழவும் அஞ்சுகிறோம்,சாகவும் அஞ்சுகிறோம்.நம் குடும்பம் என்ன ஆகுமோ என்ற அச்சம்,நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற அச்சம்,நமது வேலை போய்விடுமோ என்ற அச்சம்,இது போன்ற நூற்றுக் கணக்கான அச்சங்கள்.அஞ்சுகின்ற மன நிலையில் தான் நாம் இருக்கிறோம்.உண்மையை நேருக்கு நேர் நம்மால் பார்க்க முடிவதில்லை.
                                                                 --ஜே.கிருஷ்ணமூர்த்தி.

கோபுர எண்கள்-3

0

Posted on : Sunday, August 04, 2013 | By : ஜெயராஜன் | In :

                                                              1 x 9 + 2 = 11
                                                            12 x 9 + 3 = 111
                                                          123 x 9 + 4 = 1111
                                                        1234 x 9 + 5 = 11111
                                                      12345 x 9 + 6 = 111111
                                                    123456 x 9 + 7 = 1111111
                                                  1234567 x 9 + 8 = 11111111
                                                12345678 x 9 + 9 = 111111111

கோபுர எண்கள் -2

0

Posted on : Saturday, August 03, 2013 | By : ஜெயராஜன் | In :

                                                             9 X 9 + 7 = 88
                                                           98 X 9 + 6 = 888
                                                         987 X 9 + 5 = 8888
                                                       9876 X 9 + 4 = 88888
                                                     98765 X 9 + 3 = 888888
                                                   987654 X 9 + 2 = 8888888
                                                 9876543 X 9 + 1 = 88888888
                                               98765432 X 9 + 0 = 888888888

கோபுர எண்கள்-1

2

Posted on : Thursday, August 01, 2013 | By : ஜெயராஜன் | In :

                                                                     1 X 8 + 1 = 9
                                                                   12 X 8 + 2 = 98
                                                                 123 X 8 + 3 = 987
                                                               1234 X 8 + 4 = 9876
                                                             12345 X 8 + 5 = 98765
                                                           123456 X 8 + 6 = 987654
                                                         1234567 X 8 + 7 = 9876543
                                                       12345678 X 8 + 8 = 98765432
                                                     123456789 X 8 + 9 = 987654321